உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
137 பார்வைகள்

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 1,104 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதில் 978.9 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுகளும், காணிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சட்டவிரோத வழிகளில் சம்பாதிக்கப்பட்ட 109 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்களும் 14 மில்லியன் ரூபாய் பணமும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், சர்வதேச பொலிஸாரின் ‘சிவப்பு எச்சரிக்கை’ பிறப்பிக்கப்பட்ட 43 குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்படாத 38 குற்றவாளிகளும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட 95 பேர் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

‘1818’ என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஊடாகப் பல குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் தற்போது கிடைத்து வருகின்றன.

இந்தத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இதுவரை 7,071 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 9,105 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வன்னியில் பெற்றோலியம் மற்றும் நீர் வழங்கல் சேவைகளில் குறைபாடுகள்; ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கிட்டத்தட்ட 20% குடிநீர் வழங்கல் தேவையே முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாவும், முல்லைத்தீவில் இதுவரை பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகம் நிறுவப்படாமையால் மக்கள் அவதிப்படுவதாகவும் தெரிவித்த…

139 0 0
இலங்கை செய்திகள்

இலங்கைத் தமிழரை அடிக்க முயன்ற தனித்துணை ஆட்சியர்; அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.!

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் தனித்துணை ஆட்சியரிடம் மருத்துவ விடுப்பு கேட்க சென்ற போது அவரை காலணியால் தாக்க முயன்றதை…

120 0 0
இலங்கை செய்திகள்

ராஜபக்ஷக்களின் அரசியலுக்கு மக்கள் இனி இடமளிக்கமாட்டார்கள்.!

இலங்கையில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு இனிவரும் காலங்களில் மீண்டும் அரசியல் செய்வதற்கான எந்தவொரு வாய்ப்போ அல்லது இடமோ கிடையாது என்றும், அவர்களின் குடும்ப அரசியலுக்கு நாட்டு மக்கள் ஒருபோதும்…

105 0 0
இலங்கை செய்திகள்

மிக் போர் விமானக் கொள்முதல் விவகாரம்; நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் கோட்டாபய ராஜபக்ஷ ஆஜர்.!

இலங்கை விமானப்படைக்காக உக்ரைன் அரசிடமிருந்து 2006ஆம் ஆண்டு நான்கு ‘மிக்-27’ (MiG-27) போர் விமானங்களைக் கொள்முதல் செய்ததிலும், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த மேலும் மூன்று மிக் விமானங்களைப்…

132 0 0