பிரித்தானியத் துாதரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் கோரிக்கை!
இஸ்ரேலில் தங்கியுள்ள பிரித்தானியாவின் தூதரை “இன்றிரவுக்குள்” வெளியேற்ற வேண்டும் என்று இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) கோரியுள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம் “யூத வெறுப்பு” (anti-Semitic) கொள்கையைக் கொண்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள அவர், “இஸ்ரேல் நிலத்தில் பிரித்தானிய மேலாதிக்க காலம் முடிவுக்கு வந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான உறவுகளில் ஒரு “புத்துணர்வை” (reset) கொண்டுவரவிருப்பதாக பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளர் எட் மிலிபண்ட் (Ed Miliband) அறிவித்ததை அடுத்தே இந்த ராஜதந்திர மோதல் வெடித்துள்ளது.
மேற்கு கரையிலுள்ள சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளில் இருந்து வரும் பொருட்கள் மீது பிரித்தானியா இந்த வாரம் வர்த்தகத் தடைகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவே இஸ்ரேலிய அமைச்சரின் கடும் எதிர்ப்புக்குக் காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.