செயற்கை நுண்ணறிவுக்குத் தடை
அமெரிக்காவின் மிகப்பெரிய பாடசாலைகள் அமைந்துள்ள நியூயோர்க் நகரில் பொதுப் பாடசாலைகளில் பயிலும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பொதுவாக 13 அல்லது 14 வயதுடையவர்கள் ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளது.
இந்தத் தடை அடுத்த வாரம் அமுலுக்கு வருகிறது.
மாணவர்களின் கல்வியில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது அறிவாற்றல் வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் காட்டும் பல அறிக்கைகளுக்கு மத்தியில் இந்த முடிவு வந்துள்ளது.
சுமார் 900,000 மாணவர்களைக் கொண்டுள்ள நியூயோர்க்கின் தொழில்நுட்பப் பயன்பாட்டில் செய்யப்படவுள்ள பெரும் மாற்றத்தின் ஒரு பகுதியாக அது கருதப்படுகிறது.
இதன்படி, மூன்றாம் வகுப்பு வரை 9 அல்லது 10 வயது வகுப்பறைகளில் மாணவர்கள் மடிக்கணினிகள் அல்லது டேப்லெட்டுகளைப் பயன்படுத்துவது தடுத்து நிறுத்தப்படும்.
அதேநேரம் 9 ஆம் வகுப்பில் ஆரம்பமாகும் உயர்நிலைப் பhடசாலைகளில் மாத்திரமே செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு அனுமதிக்கப்படும்.
அதிலும் கூட தொழில்நுட்பம் குறித்தே கற்றுக்கொள்வது போன்ற குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு மட்டுமே அது வரம்பிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.
ஆசிரியர்கள் பாடங்களைத் தயாரிப்பது அல்லது செய்திகளை எழுதுவது போன்ற பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த தடையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மாணவர்களின் பணிகளை மதிப்பிடுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.