உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு 

இலங்கை செய்திகள் 12 மணி நேரம் முன்
61 பார்வைகள்

கலஹா, நில்லம்ப, குருகலே பகுதியில் புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று (02) மாலை தனது சகோதரிகளுடன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது, சமையலறையில் இருந்த புளியை எடுத்து விளையாடியதாகவும், அப்போது புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தை அறிந்ததும், சிறுமியின் தாயாரும் உறவினர்களும் உடனடியாக செயற்பட்டு, சிறுமியை பேராதனை போதனா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறுமியின் உடலம் தற்போது பேராதனை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கலஹா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

160 ஆண்டுகளை நிறைவு செய்த இலங்கை காவல்துறைக்கு பிரிடோ நிறுவனம் வாழ்த்து.!

இலங்கையில் காவல்துறை சேவை ஆரம்பிக்கப்பட்டு 160 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பையும் சட்டம் மற்றும் ஒழுங்கையும் உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அனைத்து காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும்…

33 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.!

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை…

48 0 0
இலங்கை செய்திகள்

நாமல் தான் செய்த தவறை நன்கு அறிவார்; அவர் அச்சமடைவதில் ஆச்சரியமே இல்லை.!

“நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தான் என்ன செய்தார் என்பதை நன்கு அறிந்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அல்லது இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு…

37 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போனோர் அலுவலகப் பணிகள் தொடர்பில் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி நீதி அமைச்சருடன் பேச்சு.!

பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் மற்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மார்க் – ஆன்ட்ரே பிராஞ்ச், நீதி அமைச்சர்…

51 0 0