உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

‘குடு சலிந்து’ வழக்குக் கோப்புகள் மாயம் – 10 பேரிடம் விசாரணை

இலங்கை செய்திகள் 12 மணி நேரம் முன்
59 பார்வைகள்


‘குடு சலிந்து’ என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவுக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த இரண்டு முக்கிய வழக்குகளின் கோப்புகள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் 10 நீதிமன்ற ஊழியர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 7 பெண் அதிகாரிகளும் அடங்குவதாக பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

காணாமல் போன கோப்புகளில், குடு சலிந்துவின் வழிநடத்தலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதப் படுகொலை தொடர்பான வழக்கும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் கோப்பும் அடங்குகின்றன.

கடந்த 28ஆம் திகதி வழக்கிற்கான அறிக்கையைத் தேடியபோது அது கிடைக்காததால், உப கோப்பின் மூலம் 31ஆம் திகதி மீண்டும் வழக்கை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலிலேயே பிரதான கோப்புகள் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டது.

ஆவணங்களின் பிரதிகளைப் பெறுவதற்காக அலுவலக உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கோப்புகள் காணாமல் போயுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமெராக்களின் காட்சிகளையும் ஆய்வு செய்து, கோப்புகள் எவ்வாறு காணாமல் போயின என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

160 ஆண்டுகளை நிறைவு செய்த இலங்கை காவல்துறைக்கு பிரிடோ நிறுவனம் வாழ்த்து.!

இலங்கையில் காவல்துறை சேவை ஆரம்பிக்கப்பட்டு 160 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பையும் சட்டம் மற்றும் ஒழுங்கையும் உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அனைத்து காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும்…

33 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.!

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை…

48 0 0
இலங்கை செய்திகள்

நாமல் தான் செய்த தவறை நன்கு அறிவார்; அவர் அச்சமடைவதில் ஆச்சரியமே இல்லை.!

“நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தான் என்ன செய்தார் என்பதை நன்கு அறிந்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அல்லது இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு…

37 0 0
இலங்கை செய்திகள்

காணாமல்போனோர் அலுவலகப் பணிகள் தொடர்பில் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி நீதி அமைச்சருடன் பேச்சு.!

பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் மற்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மார்க் – ஆன்ட்ரே பிராஞ்ச், நீதி அமைச்சர்…

51 0 0