உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
3 வியாழன்

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 12ஆவது ஆண்டு நிறைவு விழா.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
55 பார்வைகள்

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 12ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று பெரியகல்லாறு மெதடிஸ்த சமூக மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைவி அருட்சகோதரி தயாளினி ஜோன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலாளர் யு. உதயசிறீதர் அவர்கள் பிரதான விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

ஆன்மீக அதிதிகளாக கல்லாறு மெதடிஸ்த சேகர முகாமைக்குரு அருட்திரு. செ. திருமறைதாசன், கல்முனை மெதடிஸ்த சேகரத்தைச் சேர்ந்த அருட்செல்வி. அ. சுலோஜினி மற்றும் கோடைமேடு சிவஶ்ரீ. க. வடிவேல் குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஆசிகளையும் வாழ்த்துகளையும் வழங்கினர்.

இந்நிகழ்விற்கான நிதி அனுசரணையினை எஸ்.கியு.எம்.பவுன்டேசன் மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திருமதி தருணி சிவகுமார் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

விழாவில் பல்வேறு தொழிற்பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள், ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் பணியாளர்கள், ஆசிரியர்கள், பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்கள், தற்போதைய பயிற்சியாளர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஆட்சிகள் மாறினாலும் ஊடகர்கள் மீதான அச்சுறுத்தல்கள் நீங்காமல் தொடர்கின்றன.!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றமைக்காக அரச ஊடகம் ஒன்றில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளமை, காலத்துக்குக் காலம் ஊடகவியலாளர்கள் மீதான…

37 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர்வெட்டு.!

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

77 0 0
இலங்கை செய்திகள்

போ*தை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது.!

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் பெண் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய…

51 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு கொள்கலன் முனையத்தின் 2ஆம் கட்டப் பணிகளில் முறைகேடு.!

கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளில் பல குறைபாடுகளும் முறைகேடுகளும் நிகழ்ந்து காணப்படுகின்றன என்று அங்கு பணியாற்றும் பொறியியலாளர்களும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் சுட்டிக்காட்டுகின்றனர் என…

40 0 0