நித்திரை கலக்கத்தால் விபத்து: பள்ளத்தில் பாய்ந்த கார்
யாழ்ப்பாணத்திலிருந்து சுற்றுலா சென்ற கார் ஒன்று, நித்திரை கலக்கத்தில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்ததில், காரில் பயணித்த இருவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (02) பிற்பகல் 2.15 மணியளவில் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள், ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்துள்ளது.
விபத்தில் காரில் பயணித்த இருவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், கார் பலத்த சேதமடைந்துள்ளது.
ஹட்டன் வலய காவல்துறைத் தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகரவின் பணிப்புரையின் பேரில் ஹட்டன் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.