உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

அம்பாறையில் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா

இலங்கை செய்திகள் 42 நிமிடங்கள் முன்
56 பார்வைகள்

தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உயிர்த் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவுகூரும் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா, அம்பாறை மாவட்டத்திலுள்ள விசேட அதிரடிப்படை முகாம் நினைவிடத்தில் நேற்று (01) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் ஆன்ம சாந்திக்காக பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து தேசியக் கொடி மற்றும் பொலிஸ் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன், வீரமரணமடைந்த வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை பிராந்திய பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்ல பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நினைவுத் தூபிக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அம்பாறை கோட்டத்திற்குட்பட்ட விசேட அதிரடிப்படை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.

இதன்போது உரையாற்றிய பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்ல, தேசத்தையும் மக்களையும் பாதுகாக்கும் பணியில் உயிர்த் தியாகம் செய்த விசேட அதிரடிப்படை வீரர்களின் துணிவு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவை எனத் தெரிவித்தார்.

அத்துடன், வீரர்களின் தியாகங்களை ஒருபோதும் மறவாது போற்றுவதுடன், அவர்களின் குடும்பங்களின் நலன்களைப் பேணுவதும் பொலிஸ் திணைக்களத்தின் முக்கிய கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) அம்பாறை மாவட்ட செயலகத்தின் ‘ஏ.ஐ. விக்கிரம’ கேட்போர் கூடத்தில்…

46 0 0
அம்பாறை செய்திகள்

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிக்கை

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை தற்போதைய இடத்திலிருந்து வேறு பொருத்தமான இடத்திற்கு மாற்றி, புதிய நிரந்தரக் கட்டடமொன்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கரைப்பற்று மாநகர…

30 0 0
அம்பாறை செய்திகள்

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாஉல்லாவின் விளக்கமறியல் நீடிப்பு!

பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் அகமது செய்யது சக்கி அதாஉல்லாவை எதிர்வரும் செப்டம்பர் 09ஆம்…

70 0 0
அம்பாறை செய்திகள்

கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு; தொடர் வீதி விபத்துக்களால் மக்கள் அச்சம்.!

அம்பாறை மாவட்டம், கல்முனை மற்றும் சம்மாந்துறைப் பகுதிகளின் பிரதான வீதிகளில் கட்டாக்காலி நாய்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, பொதுமக்கள் பெரும் அச்சத்துடனும் அசௌகரியங்களுடனும்…

73 0 0