புதையல் தோண்ட முற்பட்ட இராணுவ உயரதிகாரி உட்பட எட்டு பேர் கைது.!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைமடு 55 ஆம் கட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8 பேர் கொண்ட குழுவினர் புதையல் தோண்ட முற்பட்ட வேளை கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் புதையல் அகழ்வில் ஈடுபட்ட இராணுவ உயரதிகாரி உட்பட எட்டு பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு சிலாபம், புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணம் மற்றும் சிறிய ரக வாகனம் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

