உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
21 வெள்ளி

நியூசிலாந்தில் இருந்து வருகை தந்த மருத்துவர்கள் குழு மன்னார் மாவட்ட அரச அதிபருடன் கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
113 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நியூசிலாந்து தேசத்தில் வசித்து வரும் ஜேம்ஸ் பத்மநாதன் பிரேம்குமார் தலைமையில் நியூசிலாந்து தேசத்தில் இருந்து வருகை தந்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக இலவச மருத்துவ முகாம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த குழுவினர் நேற்றைய தினம் வியாழக்கிழமை (20) மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து உரையாடி உள்ளனர்.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு நேற்று விஜயம் செய்த குறித்த குழுவினரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மாலை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நியூசிலாந்து தேசத்தில் வசித்து வரும் ஜேம்ஸ் பத்மநாதன் பிரேம்குமார் அவர்களின் குறித்த செயல்பாட்டை பாராட்டிய அரசாங்க அதிபர் புலம்பெயர் நாட்டில் வாழ்ந்து வரும் நிலையில் பிறந்த நாட்டையும், மாவட்டத்தையும் நேசித்து மன்னார் மாவட்ட மக்களுக்காக குறித்த நடவடிக்கையை மேற்கொண்டமைக்காக குறித்த குழுவினருக்கு தனது நன்றியும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

குறித்த மூன்று நாட்கள் மேற்கொண்ட இலவச மருத்துவ முகாமில் பல நூற்றுக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர்.

குறிப்பாக மாந்தை மேற்கில் மேற்கொள்ளப்பட்ட குறித்த மருத்துவ முகாம் ஊடாக பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்ற மக்கள் பலர் பயனடைந்துள்ளனர். பின்தங்கிய கிராம மக்களும் பயனடைந்துள்ளனர். எனவே இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அரச அதிபர் குறித்த குழுவினரிடம் தெரிவித்தார்.

குறித்த குழுவினர் மன்னார் உப்புக்குளம், விடத்தல் தீவு மற்றும் அந்தோனியார்புரம் ஆகிய கிராமங்களில் கடந்த மூன்று நாட்களாக இலவச மருத்துவ முகாமை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரிப்பு!

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு, 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

18 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான ஒளிப்பாவனையால் 200க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்…

53 0 0
இலங்கை செய்திகள்

வலி. வடக்கு காணி விடுவிப்புப் போராட்டம் – ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் வாக்குமூலம்!

​பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்திடம் பலாலி பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். ​வலி வடக்கில்…

60 0 0
இலங்கை செய்திகள்

AI ஐ அதிகாரிகளுக்கு மாற்றீடாக அன்றி அவர்களின் வினைத்திறனை அதிகரிக்க பயன்படுத்த வேண்டும்!

செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence) மனித அதிகாரிகளை மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரித்து மக்களுக்கான சேவைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், தொழில்நுட்பம் எத்துணை வளர்ச்சியடைந்தாலும்…

42 0 0