உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
72 பார்வைகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் உடை விவகாரத்தினை பூதாகரமாக்கி வைத்தியசாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் இன ரீதியான பிரச்சாரத்தினை கண்டித்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில், சிற்றூழியர்களின் சீருடை அணியாமல் மதசார்பு ஆடை அணிந்து வருகை தரும் புதிய நியமனம் பெற்ற 9 பேரின் சீருடை அவமதிப்பை எதிர்த்து இன்று (17) 6 தொழில் சங்கங்களின் ஆதரவுடன் அமைதியாக சிற்றூழியர்களின் சங்கத்தினரால் நடாத்தப்பட்டுள்ளது.

அரச சுற்று நிரூபத்தின் அடிப்படையில் தாங்கள் சீருடைகளை அணிவந்துவரும் நிலையில் சுகாதார அமைச்சினால் 06-08-2026 அன்று சிலர் நியமனங்களைப் பெற்று வைத்தியசாலைக்கு வந்த சுகாதார சிற்றூழியர்கள் சிலர் சீருடை தொடர்பில் ஏற்படுத்திய குழப்பங்களை சில சக்திகள் இனவாத ரீதியில் முன்னெடுக்கும் செயற்பாடுகளை கண்டித்தும் அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தகோரியும் இதன்போது கோசங்கள் எழுப்பப்பட்டன.

இதன்போது சீருடையின்றி வருபவர்களை கடமைக்கு அனுமதிக்காதே, சமூக வலைத்தளங்களே எங்களைக் கொல்லதே, அனைவருக்கும் பொதுவான சீரூடையை அணிய அனுமதியுங்கள், சீருடை தொடர்பான சுற்றுநிரூபத்தினை உடன் அமுல்படுத்து, வைத்தியசாலைக்கு எதிராக அவதூறுகளை பரப்பாதீர்கள் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மத ரீதியான சீருடைக்கு அனுமதி இல்லை, நிர்வாகத்திற்கு கட்டுப்படாத புதிய பெண் ஊழியர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுங்கள், சட்டம் கலாச்சார உடையை அங்கிகரிக்குமானால் இனி சீருடை என்ற விதியை அகற்றுங்கள், சகல மதத்தவருக்கும் சீருடை விலக்கை தாருங்கள் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த கோரிக்கைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் தேசிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0