வட்டவளை மீனாட்சி தோட்டம் முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூரம்.!
வட்டவளை மீனாட்சி தோட்டம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம் மிகவும் கோலாகலமாக நேற்று (14) இடம்பெற்றது .
நேற்றைய தினம் காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு அம்பாளுக்கு பாலாபிஷேகம், பஞ்சாமிர்தம் அபிஷேகம் இடம்பெற்றது.
தொடர்ந்து அடியார்கள் ஒன்று திரண்டு அம்மனுக்கான சீர்வரிசை பொருட்களை வெளிவீதி உலாவாக வலம் கொண்டு வந்து பின்னர் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.
மாபெரும் ஆடிப்பூர பூஜையின் பின்னர் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த கிரியைகள் யாவும் வவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த சுரேஷ் ஷர்மா தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பெருந்திரளான அடியார்கள் கலந்து கொண்டதும் அம்பாளுக்கு வளையல்கள் அலங்கரிக்கப்பட்டதும் விசேட அம்சமாகும்.

