சேவைச் சந்தை வர்த்தகர்களுக்கான நிதியியல் அறிவு பற்றிய கலந்துரையாடல்.!
கிளிநொச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட சேவைச் சந்தை வர்த்தகர்களுக்கு நிதியியல் அறிவு தொடர்பான கருத்தமர்வு ஒன்று இன்று பிற்பகல் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பல்வேறுபட்ட நிதி நிறுவனங்களினால் கடன்கள் வழங்கப்பட்டு அதி கூடிய வட்டிகள் அறவிடப்பட்டு வருவதனால் அதிகளமான வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வர்த்தக நடவடிக்கைகளையும் இழக்கும் நிலை காணப்படுகின்றது.
அத்துடன், கிராம மட்டங்களில் பின்தங்கிய மக்களை இலக்கு வைத்து பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு அதிகூடிய வட்டிகள் அறவிடப்பட்டும் வருகின்றன.
அந்தவகையில் நிதியியல் அறிவு பற்றிய அறிவினை ஏற்படுத்தும் வகையில் மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்தினால் பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் உபதவிசாளர் மற்றும் சேவை சந்தை வர்த்தகர்கள் பிரதேச சபையின் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


