உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

91 பார்வைகள்

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ டி போல் (Rodrigo De Paul) மைதானத்தில் கோல் அடித்த பிறகு தனது உணர்வுபூர்வமான அஞ்சலியைச் செலுத்தியுள்ளார்.

முன்னணி கால்பந்து தொடரில் (MLS) இன்டர் மியாமி அணிக்காக விளையாடிய ரொட்ரிகோ டி போல், போட்டியின் 31-ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்கு வெளியிலிருந்து ஒரு சிறப்பான கோலை அடித்தார்.

கோல் அடித்த மகிழ்ச்சியைக் கொண்டாடிய அவர், தனது ஜெர்ஸியைக் கழற்றி, அதனுள் அணிந்திருந்த மெஸ்ஸியின் 10-ஆம் இலக்க ஜெர்ஸியைக் காண்பித்து மெஸ்ஸியினுடைய குடும்பத்திற்குத் தனது ஆதரவையும் அஞ்சலியையும் வெளிப்படுத்தினார்.

மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்ஸி, ரொசாரியோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

லியோனல் மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையில் அவரது தந்தை ஜோர்ஜ் முக்கியமான பங்கு வகித்தார்.

மெஸ்ஸியின் முகவராகவும், அவரது வணிக விவகாரங்களை நிர்வகிப்பவராகவும் செயற்பட்ட அவர், மெஸ்ஸி சிறுவயதாக இருந்தபோது பார்சிலோனா கால்பந்து கழக அணியின் ‘லா மாசியா’ தொழிற்பயிற்சிக் கூடத்தில் சேர்வதற்கு முக்கியக் காரணமாகவும் அவர் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

60 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

55 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

‘பலோன் டி ஓர்’ விருது யாருக்கு?

உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி நிறைவடைந்துள்ள நிலையில், உலகின் மிக உயரிய ‘பலோன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வெல்வதற்கான போட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் களம்…

64 0 0