உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நீர்கொழும்பு சிறை வன்முறை அறிக்கை அநுரவிடம் சமர்ப்பிப்பு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
45 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த மாதம் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வின்போது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார இந்தத் தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த மாதம் 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் மோதலில் 22 கைதிகளும், 10 அதிகாரிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் 21 அதிகாரிகள் மற்றும் 106 கைதிகள் படுகாயமடைந்தனர்.

மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டுவிட்டன. எனினும், பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட கூடுதல் சாத்தியமான நடவடிக்கைகளை ஆராய்வதற்காகவே விசேட ஜனாதிபதி குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் ஊடாக உயிரிழந்த மற்றும் காயமடைந்த அதிகாரிகளுக்கான இழப்பீடு, ஓய்வூதியம் வழங்குதல், அவர்கள் பெற்ற கடன்கள் தொடர்பில் தீர்வு காணுதல் மற்றும் காயமடைந்தவர்களின் முழுமையான இயலாமை நிலை குறித்து விசாரித்துத் தகுந்த பரிந்துரைகள் வழங்கப்படவுள்ளன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

51 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

51 0 0
இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

59 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

56 0 0