பிரதமரை சந்தித்துப் பேச்சு நடத்திய இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
இலங்கைக்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட உறவுகளின் அடித்தளத்தை இருவரும் இந்தச் சந்திப்பின் போது மீண்டும் உறுதிப்படுத்தினர்.
அத்துடன், தமது அண்மைய சந்திப்புகளை நினைவுகூர்ந்த அவர்கள், முன்னுரிமை அளிக்கப்பட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினர்.




