உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ்.கரன் நியமனம்

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
98 பார்வைகள்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர சிரேஷ்ட அதிகாரி சுப்பிரமணியம் கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது நிர்வாக அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இந்நியமனத்திற்கு அமைய, அவர் செவ்வாய்க்கிழமை (04) அம்பாறை மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அம்பாறை மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். ஜெகராஜன் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு வரை கல்வி கற்ற இவர், தொடர்ந்து அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் உயர்தரம் வரை பயின்று, கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொருளாதார விசேட சிறப்புப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார்.

பாடசாலைக் காலத்திலேயே நிர்வாக சேவை அதிகாரியாக வேண்டும் என்ற இலக்குடன் கற்ற இவர், இலங்கை நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து உதவிப் பிரதேச செயலாளராகவும், பிரதேச செயலாளராகவும் திருக்கோவில், ஆலையடிவேம்பு, நாவிதன்வெளி மற்றும் வாகரை உள்ளிட்ட பல்வேறு பிரதேச செயலகங்களில் பணியாற்றியுள்ளார்.தொடர்ந்து, தொழில் அமைச்சின் உதவிச் செயலாளராகக் கொழும்பிலும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இக்கடமைப் பொறுப்பிற்கு முன்னர், கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராகக் கடமையாற்றிய காலப்பகுதியில், கிழக்கு மாகாணம் முழுவதும் மிகக் குறுகிய காலத்தில் பல்வேறு சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

47 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

26 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

55 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

53 0 0