உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து கடும் காற்றுடன் கூடிய கனமழை!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
103 பார்வைகள்

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

நீர் ஏந்து பகுதிகளான மவுஸ்சாகலை நீர் தேக்க பகுதியில் நேற்றைய தினம் 117 .5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது அதேபோல் லக்சபான நீர் மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதியில் 183.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்க பட்டு உள்ளது.மேலும் சாமி மலை ஓயா மரே ஓயா சியத்தலகங்குல ஓயா காட்மோர் ஓயா சிற்றாறுகள் காட்மோர் நீர் வீழ்ச்சி மோகினி எல்ல நீர் வீழ்ச்சி மறே நீர் வீழ்ச்சி லக்சபான நீர் வீழ்ச்சி களில் அதிக அளவில் வெள்ளம் பாய்ந்த நிலையில் உள்ளது.

இதன் காரணமாக நீர் வீழ்ச்சி பகுதிகளுக்கு பார்வையாளர்கள் செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விமலசுரேந்திர நீர் தேக்க தத்தின் நீர் நிரம்பி மதகு வழியாக நீர் வெளியேற்றம் செய்ய படுவதால் தாழ் நில பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மவுஸ்சாகலை காசல்ரீ கென்யோன் புரோட்லேன்ட் லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது என் நேரத்திலும் வான் கதவுகள் திறக்கும் நிலை ஏற்படும் என நுவரெலியா மாவட்ட காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

51 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

27 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

49 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0