சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழப்பு.!
வீரகெட்டிய, புஹுல்ஹேன பகுதியில் உள்ள காணியொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் விதாரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகிறது.
பெண்ணின் சடலம் கிடப்பதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய வீரகெட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பெண்ணின் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக தங்கல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் சடலம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.