முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு சற்று முன்னர் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதே வழக்கின் கீழ் முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும் மரணத் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.