உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வேப்பங்குளம், பட்டகாடு, 60ஏக்கர் பகுதிகளில் வீதிமின்விளக்குகள் பொருத்தம்

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
97 பார்வைகள்

வவுனியா மாநகரசபைக்குட்பட்ட பட்டாணிச்சுபுளியங்குளம் (2ம் வட்டாரம்) வட்டாரத்திற்குட்பட்ட வேப்பங்குளம், பட்டகாடு மற்றும் 60ஏக்கர் ஆகிய பகுதிகளில் வீதிமின்விளக்குகள் வவுனியா மாநகரசபையினால் பொருத்தப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களினால், வட்டார மாநகரசபை உறுப்பினர் வைரமுத்து வரதலட்சுமி மற்றும் மாநகரசபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் ஆகியோரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் நிமித்தம் குறித்த மின்விளக்குகள் நேற்று(30.07) மற்றும் இன்றைய(31.07) தினங்களில் பொருத்தப்பட்டன.

மேற்குறித்த பகுதிகளில் இரவு வேளைகளில் வீதிமின்விளக்குகள் இன்மையால் குறித்த பகுதி மக்களும் அவ்வீதிகளை பயன்படுத்துவோரும் தொடர்ச்சியான சிரமங்களை எதிர்கொண்டுவந்தனர். இதனையடுத்து கிடைக்கப்பெற்ற தொடர் கோரிக்கைகளின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளரால் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து மாநகர முதல்வரின் பணிப்பின்பேரில் குறித்த வட்டார உறுப்பினர் வைரமுத்து வரதலட்சுமி அவர்களின் ஒதுக்கீட்டின் கீழ் குறித்த மின்குமிழ்கள் பொருத்தப்பட்டதுடன் இதன்போது குறித்த உறுப்பினரும் நேரில் பிரசன்னமாகியிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

48 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

61 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

53 0 0