கச்சாய் – கெற்பெலி – ஆனையிறவு வீதி புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு.!
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி முதலீட்டு திட்டத்தின் மூலம் பச்சிலைப்பள்ளி மற்றும் தென்மராட்சி பிரதேச செயலகத்தை உள்ளடக்கிய கச்சாய் – கெற்பெலி – ஆனையிறவு 10.28Km வீதி புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று 31.07.226 கிளிநொச்சி கிளாலி சந்தியில் நடைபெற்றது.
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதியமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன கலந்து கொண்டு வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், வீதி அபிவிருத்தி அதிகார சபை தலைவர் தர்மலிங்கம் பாஸ்கரன், பச்சிலைப்பள்ளி மற்றும் தென்மராட்சி பிரதேச செயலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஒப்பந்தகாரர்கள், பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த வீதி புனரமைப்புடன் சேர்த்து 17.36 கிலோமீற்றருக்காக 746728681.16 ரூபாய் செலவிடப்படவுள்ளது.
குறித்த வீதியானது 15 மாதங்களில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிக்கு கையளிக்கப்படவுள்ளது.






