குளவிக் கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு.!
தோட்ட பணியில் ஈடுபட்ட போது குளவிக் கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி உயிரிழந்துள்ளர்.
இன்று காலை 10 மணிக்கு லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் ரட்னகிரி தோட்டப் பகுதியில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி 70 வயதுடைய தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 12 தோட்டத் தொழிலாளர்கள் லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லிந்துள்ள பொலிஸார் தெரிவித்தனர்.
குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் லிந்துலை லிந்துள்ள ரட்ணகிரி தோட்டத்தை சேர்ந்த முத்து நாராயணசாமி (வயது 70) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் லிந்துள்ள மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 203 ஆண்டுகளாக தோட்டங்களில் பணிபுரிந்து வரும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பலர் இவ்வாறான விபத்துகளில் சிக்கி மரணித்த போதும் தோட்ட நிர்வாகம் எந்த ஒரு இழப்பீடுகளையும் வழங்கியது இல்லை.
தற்போதைய அரசாங்கம் இதில் கவனம் செலுத்தி இவ்வாறான விதத்தில் மரணம் அடையும் தொழிலாளர்களுக்கு இழப்பீடுகளை பெற்று கொடுக்க முன்வர வேண்டும்.