உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

நெல் சந்தைப்படுத்தல் சபை இதுவரை மன்னாரில் நெல் கொள்வனவு மேற்கொள்ளவில்லை.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
70 பார்வைகள்

வடக்கு மாகாணத்தில் நெற்கிண்ணம் (rice Paul area) என அழைக்கப்படும் மன்னார் மாவட்டத்தில் இதுவரை நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்வனவில் ஈடுபடவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வட மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற பகுதிகளில் நெல் கொள்வனவில் ஈடுபடுகின்ற போதும் மன்னார் மாவட்டத்தில் இன்னும் நெல் கொள்வனவு நடைபெறவில்லை.

ஏனைய மாவட்டங்களில் 15 தொடக்கம் 20 இடங்களில் நெல் கொள்வனவு நடைபெறுகின்றன. மன்னார் மாவட்டத்தில் கடந்த கால போகத்தில் மூன்று இடங்களில் மாத்திரமே நெல் கொள்வனவு நடைபெற்றது.

அதிகமான நெல் உற்பத்தி உள்ள மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை இவ்வாறான அநீதியான செயலில் ஈடுபடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக மடு பிரதேச செயலாளர் பிரிவு இலுப்பைக் கடவை பிரதேசம் போன்ற இடங்களில் நெல் கொள்வனவு நடைபெறுவதில்லை.

கடந்த கால போக நெல்லை விவசாயிகள் இன்னும் விற்பனை செய்யாமல் வைத்திருக்கின்றனர்.

மாவட்டத்தில் சிறுபோக அறுவடையும் பல பகுதிகளில் நடைபெறுகின்ற போதும் நெல் சந்தைப்படுத்தல் பிரிவு நெல்லை கொள்வனவு செய்யாததால் குறைந்த விலையில் தனியார் வியாபாரிகளிடம் விவசாயிகள் நெல்லை வழங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உரிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர் இந்த விடயத்தில் எது விதமான அக்கறையுமின்றி செயலாற்றுகின்றனர் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுத்து மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் நெல் கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபை முன் வரவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0