உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற தெய்வீக கிராம நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
105 பார்வைகள்

இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலக ஒழுங்கமைப்பில் மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகளின் இணையம் இணைந்து ஏற்பாடு செய்த தெய்வீக கிராம நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை (29) காலை மன்னார் நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் அ.தனுஜன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இன்று புதன்கிழமை (29) காலை மன்னார் பிரதான பாலத் தடியில் இருந்து மன்னார் நகர மண்டபம் வரை கலாச்சார பேரணி இடம்பெற்றது.

குறித்த பேரணியில் விருந்தினர்களாக சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் சைவத்திரு செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீப், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோர் உள்ளடங்களாக அறநெறி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மேலும் சிறப்பு சொற்பொழிவு, சிவதாண்டவ நாடகம், கௌரவிப்பு நிகழ்வு, பண்ணிசை, நடனம்ஆகிய நிகழ்வுகள் இடம் பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0