என் வழி தனி வழி – சஞ்சு சம்சன் உருக்கம்!
பிறரின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், தனக்கான பாணியில் மட்டுமே இனி கிரிக்கெட் விளையாடப் போவதாக இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் சஞ்சு சம்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அண்மையில் டி20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றத் தொடர்ச்சியாக அரைசதங்கள் அடித்து முக்கிய பங்காற்றிய அவர், நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்தியக் கிரிக்கெட்டில் நிலவும் போட்டிச் சூழலிலிருந்து விலகி, மீதமுள்ள சில ஆண்டுகளை எனது சொந்த விருப்பத்தின் படியே விளையாடத் தீர்மானித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி தமக்கு வழங்கிய உடற்தகுதி ஆலோசனைகள் மற்றும் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராகத் தாம் அமைத்த வியூகங்கள் குறித்தும் சஞ்சு சம்சன் தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.