ஆற்றில் குதித்த பெண்ணால் பதற்றம்.!
மட்டக்களப்பு – ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் ஒருவரை இரு இளைஞர்கள் காப்பாற்றி மீட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (28) காலை இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் தான் தொலைபேசியில் உரையாட வேண்டும் என முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு சாரதியிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து முச்சக்கரவண்டியை சாரதி நிறுத்திய போது பெண் திடீரென பக்கத்திலுள்ள ஆற்றில் குதித்து தத்தளித்துள்ளார்.
இதனைக் கண்ட இரு இளைஞர்கள் ஆற்றங்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தோணி ஒன்றினை எடுத்துக் கொண்டு சென்று பெண்ணை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
