உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
28 செவ்வாய்

தேர்தலில் ‘மொட்டு’ தனித்தே போட்டியிடும்.!

இலங்கை செய்திகள் 19 மணி நேரம் முன்
16 பார்வைகள்

எதிர்காலத்தில் தேசிய தேர்தல் ஒன்று இடம்பெறும் போது, ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது வேறு எந்தத் தேசியக் கட்சியுடனோ எந்தவிதக் கூட்டணியும் அமைக்கப் போவதில்லை எனவும், தனித்தே போட்டியிடுவோம் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசில் பொலிஸ் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு என்பன அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடைப் பேச்சாளர்கள் இந்த அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்தை அரசியல் மயப்படுத்தவும் அரசு முயற்சிக்கின்றது.

சுயாதீன அரச நிறுவனங்களைக் கைப்பற்றி, அதன் ஊடாக அரச நிர்வாகக் கட்டமைப்பைத் தமக்கு ஏற்றவாறு செயற்படுத்த முனைவது முறையற்றது. ‘அரசைக் கைப்பற்றிவிட்டோம், ஆனால் அரச அதிகாரத்தை இன்னும் முழுமையாகக் கைப்பற்றவில்லை’ என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது இதன் வெளிப்பாடாகும்.

பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்களின் சேவைக்காலத்தை நீடித்து, அவர்களைத் தன்பக்கம் ஈர்த்து நீதித்துறையின் பிரதான கட்டமைப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அரசு முயற்சிக்கின்றது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது நீதித்துறையைக் கட்டுப்படுத்தவோ அல்லது ஆக்கிரமிக்கவோ முயற்சிக்கவில்லை. நீதித்துறையின் சுயாதீனத்தை முன்னிலைப்படுத்தியே செயற்பட்டோம்.

நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த நாங்கள் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. இதற்கமைவாகவே தற்போது சகல எதிர்க்கட்சிகளுடனும் ஒன்றிணைந்துள்ளோம். இதுவொரு அரசியல் கூட்டணியல்ல. ஏனெனில், ஒவ்வொரு கட்சிக்கும் இடையில் கொள்கை வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை வளர்ச்சி பெற்றுள்ளது என்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ஆனால், எவ்வாறான கருதுகோளுக்கு அமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இவ்வாறான அறிக்கைகள் மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது.

அரசின் மீதான மக்கள் நம்பிக்கையை அறிவதற்கு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் அறிக்கை வெளியிடத் தேவையில்லை. மாகாண சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தினால், மக்கள் தமது சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்துவார்கள். அப்போது ஜனாதிபதி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் உண்மையான தரத்தை விளங்கிக் கொள்ளலாம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் அல் அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் அதிபரை உடனடியாக மாற்றத் தீர்மானம்!

மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் தற்போதைய அதிபரை மாற்றி புதிய அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை (27) மாலை மன்னார் மாவட்ட…

24 0 0
இலங்கை செய்திகள்

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு நேற்று  (26) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜூலை…

60 0 0
இலங்கை செய்திகள்

“நேர்மை கலாசாரம் – தூய இலங்கை – 2026” தேசிய செயற்றிட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் “Clean Sri Lanka (தூய இலங்கை)” தேசிய செயற்றிட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு,…

64 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் நாள் அமர்வு இன்று இடம்பெற்றது!

சாய்ந்தமருது பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் 2ஆம் அமர்வு சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

45 0 0