உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
25 சனி

க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
35 பார்வைகள்

2026 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள், தங்களது அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதனை வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை இணையவழியில் மேற்காள்ள முடியும் என்றும், இந்த காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்றும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 2,532 பரீட்சை மையங்களில் ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 ஆம் திகதி வரை 2026 க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திக்க குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

பாடசாலைப் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அந்தந்த வலயக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை அதிபர்கள் தமது வலயத்தில் பரீட்சைகளுக்குப் பொறுப்பான கல்விப் பிரதி அல்லது உதவிப் பணிப்பாளரிடம் இருந்து அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் செய்ய வேண்டிய பாடசாலைப் பரீட்சார்த்திகள், அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று தேவையான திருத்தங்களை இணையவழியில் செய்துகொள்ள வேண்டும்.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் அதே இணையத்தளத்திற்குச் சென்று தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து திருத்தங்களைச் மேற்கொள்ளலாம்.

ஆகஸ்ட் 3 ஆம் திகதிக்குக் பின்னர் மேலும் கால நீடிப்பு வழங்கப்பட மாட்டாது என திணைக்களம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.

மேலதிக தகவல்களைப் பெற விரும்பும் பரீட்சார்த்திகள், பரீட்சைத் திணைக்களத்தின் உடனடி அழைப்பு இலக்கமான 1911, தொலைபேசி இலக்கங்களான 0112784208 அல்லது 0112784537, தொலைநகல் 0112784422 அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தொடர்புகொள்ளலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பிள்ளையானிற்கு விளக்கமறியல் நீடிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

22 0 0
இலங்கை செய்திகள்

கடந்த 7 மாதங்களில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 21 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று…

56 0 0
இலங்கை செய்திகள்

சிறை நெரிசலைக் குறைக்க வீட்டுக்காவலை அறிமுகப்படுத்தவும் யோசனை!

இலங்கையின் சிறைச்சாலைகளில் கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அங்குள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். பூகொடை புதிய…

21 0 0
இலங்கை செய்திகள்

வத்தளை துப்பாக்கிச் சூடு – இரு பெண்கள் உட்பட நால்வர் கைது!

வத்தளை, கதிரான பள்ளியவத்தை பகுதியில் நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களைக்…

64 0 0