யாழில் நீதிமன்ற அனுமதியுடன் எரிக்கப்பட்ட கேரளா கஞ்சா.!
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் – மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் இன்றையதினம் 600 கிலோ எடையுடைய கேரளா கஞ்சாவானது எரித்தழிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில் அது குறித்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வந்து, அந்த வழக்குகள் நிறைவடைந்த நிலையில் குறித்த கஞ்சா பொதிகள் இன்றையதினம் எரிக்கப்பட்டன.
இதன்போது நீதிவான், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் போதைத்தடுப்பு பொலிஸார், பொலிஸார், கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் முன்னிலையில் இந்த கஞ்சா பொதிகள் எரிக்கப்பட்டன.




