உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
87 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிகரித்துச் செல்லும் கசிப்பு உற்பத்தியை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முழுநாடும் ஒன்றாக எனும் ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக போதையொழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்கீழ் வவுணதீவு பிரதேசத்தில் வவுணதீவு பிரதேசசபையின் உறுப்பினர்கள் மற்றும் வவுணதீவு பொலிஸார் இணைந்து தொடர்ச்சியாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில் வவுணதீவு பிரதேசசபையின் பிரதி தவிசாளர் த.டிசாந்த் தலைமையில் பிரதேசசபை உறுப்பினர்கள், வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் இணைந்து கரையாக்கன்தீவு பகுதியில் உள்ள வாவிக்கரையோரம் முற்றுகையினை முன்னெடுத்தனர்.

இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த மூவர் அங்கிருந்து தப்பிச்சென்றதுடன் அங்கிருந்த பெருமளவான கசிப்பு போத்தல்களையும் கசிப்பு உற்பத்திக்கான கோடாவினையும் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கசிப்பு மற்றும் பொருட்களை வவுணதீவு பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷ விசேடமானவர் அல்லர்; சட்டத்தின் முன் அனைவரும் சமம்.!

நாட்டின் சட்டத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை வலுப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே என்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க…

83 0 0
இலங்கை செய்திகள்

முகநூல் களியாட்ட நிகழ்வு; 41 பேர் கைது.!

தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட முகநூல் களியாட்ட நிகழ்வு ஒன்றை சுற்றிவளைத்து 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தெல்தெனிய பொலிஸ்…

80 0 0
இலங்கை செய்திகள்

தந்தையை கொ*லை செய்த மகன்.!

மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஆவார். இருவருக்கும்…

84 0 0
இலங்கை செய்திகள்

செவ்வாயன்று கொழும்பு வருகின்றார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்.!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு வரவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார்…

56 0 0