உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கோர விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசம்; பிரபல வர்த்தகரின் மகன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
113 பார்வைகள்

திருகோணமலை – ஹபரணை வீதியின் கித்துள்ஊத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் 21 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இந்தியச் சுற்றுலாப் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து ஹபரணை நோக்கி இந்திய சுற்றுலா தம்பதியினர் பயணித்த வேன் ரக வாகனமும், ஹபரணையிலிருந்து கந்தளாய் நோக்கி அதிவேகத்தில் பயணித்த உயர்தர ரேசிங் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

மோதிய வேகத்தில் ரேசிங் மோட்டார் சைக்கிள் துண்டு துண்டாகச் சிதறி, சம்பவ இடத்திலேயே தீப்பற்றி முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான கந்தளாய் மற்றும் திருகோணமலை நகர்ப் பகுதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் பிரபல வர்த்தகரின் மகனான ஹயஷான் பத்திரன (வயது 21) உடனடியாகக் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வேனில் பயணித்த இந்தியத் தம்பதியினரில் கணவர் காயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார். காயங்களின்றி தப்பிய அவரது மனைவி தங்கியிருந்த விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கல்லோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0