உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
26 ஞாயிறு

டேவிட் வார்னருக்கு சிறை தண்டனை? – தீர்ப்பு விரைவில்

30 பார்வைகள்

அவுஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் வார்னர், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு அணி தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், ஈஸ்டர் பண்டிகை அன்று, சிட்னியில் மது அருந்தி விட்டு டேவிட் வார்னர் காரை ஓட்டிச் சென்றார்.

போக்குவரத்து பொலிஸாரின் வழக்கமான சோதனையில் டேவிட் வார்னர், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகம் மது அருந்தியது உறுதியானது. இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, டேவிட் வார்னர் மது அருந்தியதை ஒப்புக் கொண்டதாக அவரது வழக்கறிஞர் ஹில் குறிப்பிட்டார்.

மேலும் தனது செயல் முட்டாள்தனமானது என்றும், மது அருந்தி விட்டு வாடகை காரில் செல்லாமல் தானே வாகனத்தை ஓட்டிச் சென்றது தவறு எனவும் டேவிட் வார்னர் ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 18 ஆம் திகதி தண்டனை விவரங்களை அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, டேவிட் வார்னருக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனையும், 6 மாதங்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு தடையும், இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

23 ஆவது கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பம்!

ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பின்னர் உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான 23வது கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்று (23) ஆரம்பமாகின்றன. 23வது காமன்வெல்த் விளையாட்டுப்…

33 0 0
விளையாட்டுச் செய்திகள்

வலி மிகவும் அதிகமாக உள்ளது: இந்த வடு ஆற சிறிது காலம் எடுக்கும்!

உலக கிண்ண கால்பந்து இறுதிப் போட்டித் தோல்விக்குப் பின்னர் லியோனல் மெஸ்ஸி ரசிகர்களுக்கு உருக்கமான செய்தியை வெளியிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்…

84 0 0
விளையாட்டுச் செய்திகள்

நடப்பு சாம்பியனை வீழ்த்தி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது ஸ்பெயின் கால்பந்து அணி!

23-வது பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.…

51 0 0
விளையாட்டுச் செய்திகள்

2007 இல் இணைந்த ஜோடி இறுதிப் போட்டியில் எதிரும் புதிருமாக மோதுகிறது!

கால்பந்து கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 19) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி கால்பந்து வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தருணமாக அமையவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில்…

62 0 0