உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

புகழ்பெற்ற நடன ஆசிரியரான கலாபூஷணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சடங்கு.!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
18 பார்வைகள்

இலங்கையின் புகழ்பெற்ற நடன ஆசிரியரான கலாபூஷணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சடங்குகள் நேற்று நடைபெற்றபோது அவரின் மாணவிகள் அவருக்கு நடாத்திய இறுதி மரியாதையான நாட்டியாஞ்சலி அனைவரது கண்களையும் குளமாக்கியுள்ளது.

மட்டக்களப்பில் பரதகலாலயா எனும் நாட்டியபள்ளியை நடாத்திவரும் ஓய்வுபெற்ற ஆசிரியையான கலாபூஷணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரன் இலங்கை உட்பட சர்வதேசத்தின் பல பகுதிகளிலும் பரதகலாலயா நாட்டிய பள்ளியை நிறுவி பெருமளவு நாட்டிய மாணவர்களை உருவாக்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவு நாட்டிய மாணவிகளையும் ஆசிரியர்களையும் உருவாக்கிய கலாபூசணம் சுபித்ரா கிருபாகரன் நேற்று முன்தினம் சுகயீனம் காரணமாக காலமானார்.

நேற்று மாலை அவரது இறுதி நல்லடக்கம் நடைபெற்ற நிலையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி நிகழ்வின்போது அவரது மாணவிகள் கண்ணீருடன் வழங்கிய நாட்டிய சமர்ப்பணம் அனைவரது கண்களிலும் நீர்வரும் நிலையினை ஏற்படுத்தியிருந்தது.

இறுதிச்சடங்கில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய உற்பத்தித்திறன் விருதுகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் விண்ணப்பம்

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம், தனது வரலாற்றில் முதன்முறையாக தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் கீழ் நடத்தப்படும் ‘தேசிய உற்பத்தித்திறன் விருதுகளுக்கு’ இம்முறை விண்ணப்பித்துள்ளது.…

5 0 0
இலங்கை செய்திகள்

துருக்கித் தூதுவருடன் திலித் ஜயவீர எம்.பி. சந்திப்பு!

இலங்கைக்கான துருக்கித் தூதுவர் செமி லுட்ஃபு துர்குட்டை, சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். துருக்கித் தூதரகத்தில், தூதுவரின் உத்தியோகபூர்வ…

9 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் ஆஸ்திரேலிய அமைப்பு!

யாழ்ப்பாணத்தில் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றங்களை இலக்காகக் கொண்ட செயற்பாடுகளை முன்னெடுக்கத் தீர்மானித்திருப்பதாக ஆஸ்ரேலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் அரச சார்பற்ற நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள்…

60 0 0
இலங்கை செய்திகள்

மயிலிட்டி துறைமுகத்தில் நிறைந்து கிடக்கும் இந்திய இழுவைப் படகுகளை அகற்றுக.!

யாழ்ப்பாணம் – மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் நிறைந்து கிடக்கும் இந்திய இழுவைப் படகுகளை உரியவகையில் அகற்றுவதுடன், குறித்த மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்கள் பயன்படுத்தத் தக்கவாறு நிலைமைகளை ஏற்படுத்துமாறும்…

51 0 0