வலி மிகவும் அதிகமாக உள்ளது: இந்த வடு ஆற சிறிது காலம் எடுக்கும்!
உலக கிண்ண கால்பந்து இறுதிப் போட்டித் தோல்விக்குப் பின்னர் லியோனல் மெஸ்ஸி ரசிகர்களுக்கு உருக்கமான செய்தியை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆர்ஜென்டினா அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி ரசிகர்களுக்காக இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
“வலி மிகவும் அதிகமாக உள்ளது, இந்த வடு ஆற சிறிது காலம் எடுக்கும்” என்று அவர் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தமது குழுவின் உழைப்பு மற்றும் முயற்சியுடன் இணைந்து, உலகத்தின் சிறந்த அணிகளுக்கு மத்தியில் தமது அணியை மீண்டும் கொண்டு வந்து சேர்த்த, ஆர்ஜன்டீன நாட்டின் ஆதரவை தாம் எப்போதும் நினைவில் கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று, நாம் சாதித்ததைப் பாராட்டுவது கடினமாக இருக்கலாம் ஆனால் ஆர்ஜன்டீன அணி உண்மையில் தொடர்ந்து இரண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளை எட்டியுள்ளது.
இந்தநிலையில் மீண்டும் ஒருமுறை ஒரு நாடாக ஒன்றிணைந்து, ஆர்ஜென்டினாவாக இருப்பதில் பெருமிதம் கொள்ள நம்மால் முடிகிறது என்றும் லியோனல் மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் நாட்டிற்கு மெஸ்ஸி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.