உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

வலி மிகவும் அதிகமாக உள்ளது: இந்த வடு ஆற சிறிது காலம் எடுக்கும்!

விளையாட்டுச் செய்திகள் 9 மணி நேரம் முன்
64 பார்வைகள்

உலக கிண்ண கால்பந்து இறுதிப் போட்டித் தோல்விக்குப் பின்னர் லியோனல் மெஸ்ஸி ரசிகர்களுக்கு உருக்கமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆர்ஜென்டினா அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி ரசிகர்களுக்காக இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

“வலி மிகவும் அதிகமாக உள்ளது, இந்த வடு ஆற சிறிது காலம் எடுக்கும்” என்று அவர் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமது குழுவின் உழைப்பு மற்றும் முயற்சியுடன் இணைந்து, உலகத்தின் சிறந்த அணிகளுக்கு மத்தியில் தமது அணியை மீண்டும் கொண்டு வந்து சேர்த்த, ஆர்ஜன்டீன நாட்டின் ஆதரவை தாம் எப்போதும் நினைவில் கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று, நாம் சாதித்ததைப் பாராட்டுவது கடினமாக இருக்கலாம் ஆனால் ஆர்ஜன்டீன அணி உண்மையில் தொடர்ந்து இரண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளை எட்டியுள்ளது.

இந்தநிலையில் மீண்டும் ஒருமுறை ஒரு நாடாக ஒன்றிணைந்து, ஆர்ஜென்டினாவாக இருப்பதில் பெருமிதம் கொள்ள நம்மால் முடிகிறது என்றும் லியோனல் மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் நாட்டிற்கு மெஸ்ஸி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

நடப்பு சாம்பியனை வீழ்த்தி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது ஸ்பெயின் கால்பந்து அணி!

23-வது பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.…

35 0 0
விளையாட்டுச் செய்திகள்

2007 இல் இணைந்த ஜோடி இறுதிப் போட்டியில் எதிரும் புதிருமாக மோதுகிறது!

கால்பந்து கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 19) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி கால்பந்து வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தருணமாக அமையவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில்…

54 0 0
விளையாட்டுச் செய்திகள்

இங்கிலாந்து கால்பந்து அணியின் தோல்வி குறித்து இளவரசர் வில்லியம் வெளியிட்ட கருத்து!

ஆர்ஜென்டினா அணியிடம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியமை குறித்து, இளவரசர் வில்லியம் மற்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர்…

99 0 0
விளையாட்டுச் செய்திகள்

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா!

23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன்…

76 0 0