உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷன் கிளை திறந்து வைப்பு.!

42 பார்வைகள்

ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷன் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் 6ஆவது கிளை மட்டக்களப்பில் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முக்கிய அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் தலைமை விருந்தினராகப் ஹெரிட்டேஜ் குரூப் நிறுவனத்தின் கௌரவ தலைவர் தேசபந்து, தேசமான்ய டாக்டர் கங்கானத் குமாரசிங்க, ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் செல்வி சது குமாரசிங்க ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மதத்தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் அதிகாரி சஞ்சீவ டி சில்வா மற்றும் மதத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பிராந்திய மட்டத்திலான மேம்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

விவசாயம், முதலீட்டாளர்கள் மற்றும் இந்தத் துறையோடு தொடர்புடைய அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு பிரதான மையமாகவே இந்த பிளான்டேஷன் துறை காணப்படுகிறது.

இதன் மூலமாக நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு நாங்கள் ஒரு பலமிக்க பங்களிப்பை வழங்கி வருகிறோம் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

நாட்டில் பரவி வரும் டெங்கு நோயின் தாக்கம் இந்த வாரம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக…

8 0 0
இலங்கை செய்திகள்

மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட பேருந்துகள் சோதனை.!

நுவரெலியாவில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் இயக்கப்படுவதாகக் சந்தேகிக்கப்படும் 03 பயணிகள் பேருந்துகளை நேற்று திங்கட்கிழமை (20) மாலை நுவரெலியா தலைமை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். நுவரெலியா…

14 0 0
இலங்கை செய்திகள்

ஜனாதிபதி மீதான நம்பிக்கை அதிகரிப்பு என்பது போலியான அறிக்கை.!

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதம் உயர்வடைந்துள்ளது என்று மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் போலியானது” என்று பிவிதுறு ஹெல…

16 0 0
இலங்கை செய்திகள்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம் வெற்றி.!

அண்மைக்காலமாக பிராந்தியத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம்…

16 0 0