உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
13 திங்கள்

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு – ஒரே நாளில் 640 பேர் கைது!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
37 பார்வைகள்

பொலிஸ்மா அதிபரின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாக, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்புச் சோதனை நடவடிக்கைகளில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 30 முக்கிய சந்தேகநபர்கள் உட்பட 640 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, நாடு முழுவதும் 27 ஆயிரத்து 217 நபர்கள் பொலிஸாரால் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்ட 30 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் பின்வருமாறு:-

* குற்றச்செயல்களுடன் தொடர்புடையோர் – 640 நபர்கள்.
* பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர் – 88 சந்தேகநபர்கள்.
* நாள் குறிப்பிட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர் – 228 சந்தேகநபர்கள்.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 சாரதிகளுக்கு எதிராகவும், ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய 133 சாரதிகளுக்கு எதிராகவும், ஏனைய போக்குவரத்து விதிமீறல்களுக்காக 4 ஆயிரத்து 51 பேருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்துப் பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கிய வகையில் வலய மட்டத்திலான இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தாது இனியும் வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா? – சுகாதார அமைச்சுக்கு மருத்துவர் சமல் சஞ்சீவ சாட்டையடி!

இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் பாரதூரமான டெங்கு ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசும் சுகாதார அமைச்சும் துரித நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று மருத்துவ மற்றும் சிவில்…

13 0 0
இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிராகப் பிரேரணை கொண்டு வருவது மிகவும் அவசியம்!

அரசமைப்புத் திருத்தம் ஊடாகத் தற்போது பதவியில் உள்ள நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்க அரசு எடுக்கும் முயற்சி, நிறைவேற்றுத்துறையால் நீதித்துறையினருக்கு வழங்கப்படும் ‘இலஞ்சம்’ அல்லது ‘பரிசு’…

11 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேசசபை உறுப்பினர் கைது!

சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில், அம்பலாங்கொட பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அமித் சத்துரங்க சமரநாயக்க, காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால்…

11 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையின் சமையல் அறையில் இருந்து ஆயுதங்கள் மீட்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும்…

15 0 0