உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
13 திங்கள்

வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்றுவது சமூகத்துக்குப் பெரும் பாதிப்பு!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
25 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, காலி மஹமோதர வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்ற அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அந்த அமைப்பின் தலைவரும் விசேட மருத்துவ நிபுணருமான மருத்துவர் சமல் சஞ்சீவ, இந்த வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்றுவது சமூகத்துக்கும் சூழலுக்கும் ஏற்புடையதல்ல என்று சுட்டிக்காட்டினார்.

மஹமோதர வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்றுவதற்குப் பதிலாக, அதனைச் சுற்றுலாப் பயணிகளுக்கான பிரத்தியேக வைத்தியசாலையாகவோ அல்லது டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்களுக்கான விசேட சிகிச்சை மையமாகவோ மாற்றுவதே தற்போதைய சூழலுக்குப் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் அதிகரித்துள்ள நிலையில், தென் மாகாணத்திலுள்ள போதனா வைத்தியசாலைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய நெருக்கடியான நிலையில், ஒரு வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்றுவது எதிர்காலத் தேவைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், இந்த வைத்தியசாலை பிரதான வீதிக்கு அருகிலும், கடற்கரைக்கு மிக அண்மையிலும் அமைந்துள்ளமையால், இதனைச் சிறைச்சாலையாக மாற்றாமல், கல்விப் பயிற்சி மையமாகவோ அல்லது சுற்றுலாத்துறை சார்ந்த வைத்தியசாலையாகவோ மாற்றுவது சுற்றுச்சூழலுக்கும் சமூகத்துக்கும் அதிக நன்மைகளைத் தரும் என்றும்  மருத்துவர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தாது இனியும் வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா? – சுகாதார அமைச்சுக்கு மருத்துவர் சமல் சஞ்சீவ சாட்டையடி!

இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் பாரதூரமான டெங்கு ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசும் சுகாதார அமைச்சும் துரித நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று மருத்துவ மற்றும் சிவில்…

13 0 0
இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிராகப் பிரேரணை கொண்டு வருவது மிகவும் அவசியம்!

அரசமைப்புத் திருத்தம் ஊடாகத் தற்போது பதவியில் உள்ள நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்க அரசு எடுக்கும் முயற்சி, நிறைவேற்றுத்துறையால் நீதித்துறையினருக்கு வழங்கப்படும் ‘இலஞ்சம்’ அல்லது ‘பரிசு’…

11 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேசசபை உறுப்பினர் கைது!

சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில், அம்பலாங்கொட பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அமித் சத்துரங்க சமரநாயக்க, காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால்…

11 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையின் சமையல் அறையில் இருந்து ஆயுதங்கள் மீட்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும்…

15 0 0