உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
13 திங்கள்

ஐக்கியமாகச் செயற்பட தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் இணக்கம்!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
30 பார்வைகள்

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பிரதான ஆறு கட்சிகள் தமது மக்கள் எதிர்நோக்கும் பொது விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கு இனங்கியுள்ளன.

அந்த இணக்கப்பாடு குறித்து அவை ஆறும் சேர்ந்து கூட்டாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நாளை திங்கட்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கொழும்பு – கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் நடைபெறுகின்றது.

இதில் அந்த ஆறு கட்சிகளினதும் தலைவர்களும் ஒரே மேசையிலிருந்து தங்கள் கூட்டுச் செயற்பாட்டுக்கான இணக்கப்பாட்டையும் அது தொடர்பான திட்டங்களையும் நாளை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு தமிழர்கள் தரப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி, மலையகத் தமிழர்கள் தரப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம்கள் தரப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியனவே ஒன்றுபட்டுச் செயற்பட இணங்கியிருக்கின்றன.

பிரதான எதிரணிக் கூட்டில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் ஐக்கிய செயற்பாட்டுக்கு இணங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டு அமைப்புக்கு பெயர் ஏதும் உண்டா என்று கேட்ட போது –
”இப்போதைய நிலையில் இது ஒரு கூட்டு அமைப்பல்ல. ஒன்றுபட்டு விடயங்களை எதிர்கொள்வதற்கான இணக்கப்பாடு மட்டுமே. அதனால் அதற்கு விசேடமான பெயர் ஒன்றுமில்லை.” – என்று இந்த ஏற்பாட்டுக்குப் பின்னணியில் செயற்படும் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தாது இனியும் வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா? – சுகாதார அமைச்சுக்கு மருத்துவர் சமல் சஞ்சீவ சாட்டையடி!

இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் பாரதூரமான டெங்கு ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசும் சுகாதார அமைச்சும் துரித நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று மருத்துவ மற்றும் சிவில்…

13 0 0
இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிராகப் பிரேரணை கொண்டு வருவது மிகவும் அவசியம்!

அரசமைப்புத் திருத்தம் ஊடாகத் தற்போது பதவியில் உள்ள நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்க அரசு எடுக்கும் முயற்சி, நிறைவேற்றுத்துறையால் நீதித்துறையினருக்கு வழங்கப்படும் ‘இலஞ்சம்’ அல்லது ‘பரிசு’…

11 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேசசபை உறுப்பினர் கைது!

சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில், அம்பலாங்கொட பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அமித் சத்துரங்க சமரநாயக்க, காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால்…

11 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையின் சமையல் அறையில் இருந்து ஆயுதங்கள் மீட்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும்…

15 0 0