உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
90 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கை உயர்மட்ட இராஜதந்திர குழுவின் பிரான்ஸ் விஜயம், தவிர்க்க முடியாத காரணங்களால் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவும் வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளன.

எதிர்வரும் 16ஆம் திகதி மேற்கொள்ளப்படவிருந்த இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் திட்டமிட்டபடி எதிர்வரும் 23ஆம் திகதி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பிரான்ஸ் விஜயமானது, பிராந்திய வல்லரசுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியில் இலங்கையின் நகர்வுகளைத் தீர்மானிக்கும் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டது.

குறிப்பாக, இலங்கைக் கடற்பரப்பில் பிரான்சின் முன்னணி நிறுவனம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிப் பணிகள் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு முனையங்களில் பிரான்சின் சி.எம்.ஏ. – சி.ஜி.எம். நிறுவனம் முதலீடு செய்யக் காட்டும் ஆர்வம் ஆகியவை குறித்து முக்கிய பேச்சுகள் இடம்பெறவிருந்தன.

இந்த விஜயத்தின் போது, சி.எம்.ஏ. – சி.ஜி.எம். நிறுவனத்தின் உலகளாவிய தலைவர் ரோடால்ஃப் சாடே மஹானாவை ஜனாதிபதி சந்தித்து முதலீட்டுத் திட்டங்களை இறுதி செய்யவிருந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், ஐரோப்பிய வல்லரசான பிரான்ஸின் இந்த எரிசக்தி மற்றும் துறைமுகப் பிரவேசமானது புவிசார் அரசியலில் பெரும் சலனங்களை ஏற்படுத்தியுள்ளது.

நெப்போலியனின் வரலாற்றுப் பார்வையின் நீட்சியாகவே பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் இந்த நகர்வுகள் அமைந்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைத் தக்கவைத்தல் மற்றும் பிராந்திய எரிசக்தி அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தல் போன்ற இலக்குகளைக் கொண்ட இந்த உயர்மட்ட விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை, இந்தப் பிரம்மாண்ட திட்டங்களின் எதிர்காலம் குறித்த பல புதிய விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0