உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற போசணை மாத கண்காட்சி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
51 பார்வைகள்

போசணை மாதத்தையொட்டி மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஏற்பாடு செய்த தேசிய போசணை மாத கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று வியாழக்கிழமை (9) காலை மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரி.ஒஸ்மன் டெனி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம்.அஸாத் கலந்து கொண்டார்.

இதன்போது ‘சிற்றுண்டிகளை பற்றி மீளச் சிந்திப்போம் இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பாரம்பரிய சிற்றுண்டிகளை தெரிவு செய்வோம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்தும், கையடக்க தொலைபேசியினால் ஏற்படும் சாதக பாதக நிலை குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது விழிப்புணர்வு நிகழ்வும் போசணை கண்காட்சியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0