உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

உள்ளூராட்சி மன்றங்கள் என்பது தனிநபரின் நிறுவனம் அல்ல.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
34 பார்வைகள்

உள்ளூராட்சி மன்றங்கள் தனி நபர்களின் சொந்த நிறுவனங்கள் அல்ல. தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள், உறுப்பினர்கள் பொது மக்களின் கருத்துகளுக்கு செவி சாய்த்தும், மதிப்பளித்தும் செயற்பட வேண்டும் என நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், இந்நாள் உறுப்பினருமான குழந்தைவேல் ரவி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றங்கள் பொது மக்களின் வரிப்பணத்தாலும் நம்பிக்கையாலும் உருவாக்கப்பட்டுள்ள மக்கள் சேவைக்கான நிறுவனமாகும். எனவே, அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் சட்ட விதிமுறைகளுக்கும் ஜனநாயக நடைமுறைகளுக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தில் 2018 இல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நோர்வூட் பிரதேச சபை கடந்த ஆண்டு மீண்டும் பதவிக்கு வந்து ஒரு வருடத்துக்குள்ளாகவே மக்களின் நம்பிக்கையை இழந்து கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. பிரதேச சபைத் தலைவர் என்பவர் பக்கச் சார்பின்றி மக்கள் சேவைக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கோட்பாட்டை மறந்து செயற்பட்டு வருகின்றார்.

குறிப்பாக தற்போதைய சபைத் தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமை (7) மாதாந்த அமர்வின் போது அவர் மேற்கொண்ட நிர்வாக அணுகுமுறை உறுப்பினர்களிடையே கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரதேச சபையின் ஊடாக அபிவிருத்திப் பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து 14 உறுப்பினர்கள் மாதாந்த அமர்வைப் புறக்கணிக்கும் நிலை உருவாகியிருந்தது. இந்த நிலை தொடருமானால் எதிர்காலதில் மேலும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. அத்தோடு, சபை உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஒரே நிலைப்பாட்டில் ஒன்றிணைந்து தமது கருத்தை வெளிப்படுத்தியிருப்பது, தற்போதைய நிலைமை குறித்து தலைவர் தீவிரமாக கவனம் செலுத்தி சிந்தித்து செயற்பட வேண்டியதை புலப்படுத்தியுள்ளது.

மேலும், சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சில நடவடிக்கைகள், சபையின் மரபு ரீதியான நடைமுறைகள், உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற சட்ட ஒழுங்குகள் தொடர்பாக சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை உரிய முறையில் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.

சபைக்குத் தலைமை தாங்கும் மக்கள் பிரதிநிதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, எதிர்க்கருத்துகளுக்கு மதிப்பளித்து கலந்துரையாடல் மூலம் சுமூகமான தீர்வுகளைக் காண்பதே ஜனநாயக தலைமைத்துவத்தின் அடையாளமாகும்.

எனவே, நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் தனது நிர்வாக செயற்பாடுகளில் உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்தி, வெளிப்படைத் தன்மை, சட்ட ஒழுங்கு மற்றும் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டும் என்பதே உறுப்பினர்களதும் பொது மக்களதும் எதிர்பார்ப்பாகும் என்பதை உணர்ந்து நோர்வூட் பிரதேச சபையின் கௌரவத்தையும், கண்ணியத்தையும், மக்களின் நம்பிக்கையையும் பாதுகாக்க வேண்டியது அனைவரது கடமையும் பொறுப்பும் ஆகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0