• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 8, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறைக்கலவரம் தொடர்பில் நீதியமைச்சர் நாடாளுமன்றில் விளக்கம்!

selvan by selvan
July 7, 2026
in இலங்கை செய்திகள்
0
நீர்கொழும்பு சிறைக்கலவரம் தொடர்பில் நீதியமைச்சர் நாடாளுமன்றில் விளக்கம்!
Share on FacebookShare on Twitter

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கொடூர வன்முறைச் சம்பவமானது, சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய இரு எதிர்த்தரப்புக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலினால் தூண்டப்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் இன்று வெளிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், இது தொடர்பான விரிவான விசாரணைகள் இன்னும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால், இறுதி முடிவுகள் எதற்கும் இன்னும் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீத்து அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த ஜூலை 5ஆம் திகதி இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட ஆரம்பகட்ட மோதலில் இரு கைதிகள் உயிரிழந்தமையுடன் மேலும் 35 பேர் காயமடைந்தனர்.

அன்றைய தினம் மாலையே நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எனினும், மறுநாள் காலை கைதிகள் காலை உணவை உட்கொண்ட பின்னர், நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காகத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் மீண்டும் பாரிய வன்முறை வெடித்தது.

சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் மற்றும் ஏனைய தடைசெய்யப்பட்ட பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக, அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கிய கைதிகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறான தகவல் வழங்குநர்கள் பொதுவாகக் குற்றக் கும்பல்களினால் இலக்கு வைக்கப்படுகின்றார்கள். இந்த வன்முறைக்குப் பின்னாலுள்ள சாத்தியமான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

எனினும், இவை தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலான முதற்கட்டக் கண்டுபிடிப்புகள் மட்டுமேயாகும். இது தொடர்பான இறுதி முடிவுகள், தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.

வன்முறையின் போது ஒரு சிறிய ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினர், சிறைச்சாலையிலிருந்த சிசிரிவி கமராக்கள் மற்றும் உடல் சோதனைக் கருவிகளைத் திட்டமிட்டு நாசம் செய்துள்ளனர்.

சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருள்கள் நுழைவதைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்புகளை முடக்கும் நோக்கிலேயே அவர்கள் இதனைச் செய்துள்ளனர்.

இந்த வன்முறையில் அனைத்துக் கைதிகளும் ஈடுபடவில்லை. காயமடைந்தவர்களில் பலர் அப்பாவி கைதிகள்.

மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற ஆயுதங்களற்ற சிறைச்சாலை அதிகாரிகள் மீதும் இந்தக் கும்பல் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது.

தங்களது சக அதிகாரிகளைப் பாதுகாக்க முயன்ற போதே பல அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

அதன் பின்னர், சிறையின் இரும்பு வாயிலை உடைத்துக் கொண்டு கைதிகள் மற்றொரு வெளியேறும் வழியை நோக்கி முன்னேறியுள்ளனர்.

ஒருவேளை அவர்கள் சிறையிலிருந்து தப்பியிருந்தால், அது பொதுமக்களின் பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமைந்திருக்கும்.

இதேவேளை, இந்த வன்முறையின் போது சில கைதிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்தும் தற்போது தீவிர விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.” – என்றார்.

Related Posts

சிறைச்சாலை மோதலால் சர்வதேச முதலீடுகளும் சுற்றுலாத்துறையும் முடங்கும் அபாயம்!

சிறைச்சாலை மோதலால் சர்வதேச முதலீடுகளும் சுற்றுலாத்துறையும் முடங்கும் அபாயம்!

by selvan
July 7, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கொடூர வன்முறைச் சம்பவங்களின் முழுமையான பொறுப்பை நாட்டின் ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள்...

மட்டக்களப்பில் குளம் ஒன்றில் இருந்து மீனவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பில் குளம் ஒன்றில் இருந்து மீனவரின் சடலம் மீட்பு!

by selvan
July 7, 2026
0

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேனி தாமரை குளத்திலிருந்து மீனவர் ஒருவரின் சடலம் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சுங்கான்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின்...

மன்னாரில் தொழிற் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

மன்னாரில் தொழிற் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

by selvan
July 7, 2026
0

மன்னாரில் தனியார் நிறுவனம் நடத்திய பயிற்சி நெறிகளை நிறைவு செய்த 60 பெண் பயனாளிகளுக்கும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மனிதாபிமான அபிவிருத்திக்கான...

நீதி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் – ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தல்

நீதி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் – ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தல்

by selvan
July 7, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்குப் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ள நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, சர்வதேச சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து தனது பதவியை உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும்...

பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள சுவிஸ் தூதருடன் ரெலோ சந்திப்பு

பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள சுவிஸ் தூதருடன் ரெலோ சந்திப்பு

by selvan
July 7, 2026
0

தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள சுவிற்சலாந்தின் இலங்கைக்கான தூதுவர் மேன்மை தங்கிய சிரி வால்ட் அம்மையாரை சுவிற்சலாந்து தூதரகத்தில் இன்று 07-07-2026 தமிழ்...

கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தின் முன்னேற்றம் தொடர்பில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி.!

கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தின் முன்னேற்றம் தொடர்பில் கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி.!

by Mathavi
July 7, 2026
0

கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலம் அமைப்பதன் முன்னேற்றம் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி முல்லைத்தீவிற்கு...

குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

by Mathavi
July 7, 2026
0

மட்டக்களப்பு, வாழைச்சேனை, சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று வாழைச்சேனைப் பொலிஸார்...

மட்டக்களப்பு சிறையில் பரபரப்பு; கைதி ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி.!

மட்டக்களப்பு சிறையில் பரபரப்பு; கைதி ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி.!

by Mathavi
July 7, 2026
0

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேட்டினால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; யாழ். சிறைச்சாலைக்கு கைதிகள் மாற்றம்.!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; யாழ். சிறைச்சாலைக்கு கைதிகள் மாற்றம்.!

by Mathavi
July 7, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்படுகின்றனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களாகக்...

அரசின் நிர்வாகக் குறைபாடுகளால் நாடே ஆபத்தில்.!

அரசின் நிர்வாகக் குறைபாடுகளால் நாடே ஆபத்தில்.!

by Mathavi
July 7, 2026
0

தற்போதைய அரசின் நிர்வாகக் குறைபாடுகள், நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை மரணங்கள் மற்றும் டெங்கு ஒழிப்புத் திட்டங்களின் தோல்விகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது....

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி