உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சாவகச்சேரி உப தவிசாளரை பதவி நீக்கம் செய்தமை செல்லுபடியாகும் – தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
46 பார்வைகள்

சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளரை, ஆளுநரின் தனிநபர் விசாரணைக் குழுவின் தீர்மானத்துக்கு அமைய பதவி நீக்கியமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இடைக்காலத் தடை உத்தரவு வழங்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று மறுப்புத் தெரிவித்துள்ளது.

பதவி நீக்கல் தீர்மானத்தை இரத்துச் செய்யக் கோரியும், அந்தத் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட உப தவிசாளரினால் சட்டத்தரணி கலாநிதி கே.குருபரன் ஊடாக யாழ் மேல் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இம் மனு தொடர்பான விசாரணைகளின் போது, சட்டத்தரணி கலாநிதி கே.குருபரனின் நீண்டநேரச் சட்டவாதங்களைச் செவிமடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் சதீஸ்தரன், வழக்கின் எதிர்மனுதாரர்களுக்குக் கட்டளை அனுப்ப உத்தரவிட்ட போதிலும், கோரப்பட்ட இடைக்காலத் தடைக்கட்டளையை வழங்க மறுத்துத் தீர்ப்பளித்தார்.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து, சாவகச்சேரி பிரதேச சபைக்குப் புதிய உப தவிசாளர் ஒருவரை நியமிப்பதில் எவ்விதமான சட்டத் தடைகளும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்தச் சம்பவத்தை ஒத்த வவுனியா நகர சபை மேயரின் பதவி நீக்கத் தீர்மானத்தைக் கேள்விக்குட்படுத்தி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கடந்த வாரம் இடைக்காலத் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

48 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

47 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

39 0 0