உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
20 பார்வைகள்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மாமாங்கம் பிரதேசத்தில் கிராமசேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் சேவை வழங்கும் கட்டிடத்தினை உடைத்து கட்டப்போகதாவ தெரிவித்து அங்கு வழங்கப்பட்ட சேவைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கட்டிடம் 1998ஆம் ஆண்டு சமுர்த்தி பயனாளிகளுக்காக கட்டப்பட்டு பின்னர் தொழில் பயிற்சி அதிகாரசபையினால் தொழில் பயிற்சி வழங்கும் நிலையமாக பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில் அதுவும் கைவிடப்பட்டிருந்த நிலையில் மாமாங்கம் பிரதேசத்தின் கிராம சேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஒரே இடத்தில் சேவையினை வழங்கும் நிலையமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த நிலையத்தினை தொழில் பயிற்சி நிலையமாக அமைக்கும் வகையில் புனரமைப்பு செய்யவுள்ளதாக கூறிய நிலையில் அங்கு வழங்கப்பட்டு வந்த சேவைகள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம் குறித்த நிலையத்துடன் இணைந்ததாக மேலும் ஒரு கட்டிடம் நீண்டகாலமாக உடைந்த நிலையில் காணப்படுவதனால் அதனை புனரமைத்து தொழில் பயிற்சி நிலையத்தினை அமைக்குமாறும் இந்த கட்டிடத்தில் அதன் சேவைகளை பெறுவதற்கான வழியை ஏற்படுத்தி தருமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கான வசதி இங்கே மட்டும் உள்ளதாகவும் வேறு இடத்தில் மாற்றும்போது சேவைகள் பிரிந்துசெல்வதனால் வயோதிபர்கள் உட்பட பலர் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபுவினை தொடர்புகொண்டு கேட்டபோது,
குறித்த கட்டிடத்தினை புனரமைப்பு செய்து மீண்டும் கிராம சேவையாளர்கள் மற்றும் ஏனைய சேவைகளுக்கே வழங்கவுள்ளதாகவும் வேறு தேவைகளுக்கு குறித்த கட்டிடம் வழங்கப்படாது எனவும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0