உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

திருகோணமலையில் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்தும், அவற்றுக்கான விலைகளைக் குறைக்க வலியுறுத்தியும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது இன்று(11.05.2026) காலை திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.​ தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் (TSDP) ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், கலந்துகொண்டவர்கள் பெற்றோல், எரிவாயு மற்றும் மின்கட்டண உயர்வைக் குறைக்குமாறு கோரி பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள், கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் பொருட்களின் விலை உயர்வினால் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் வார்த்தைகளால் கூறமுடியாத துயரங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.


குறிப்பாக, நாளாந்த வருமானத்தை நம்பியிருக்கும் வறிய மக்கள் மூன்று வேளை உணவிற்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய தரப்பினருடன் ஆலோசித்து மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதேவேளை, எரிபொருள் விலை உயர்வு காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் பின்தங்கிய கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அத்துடன், உப்பூறல், சீனன்வெளி, நல்லூர். பாட்டாளிபுரம், சூடைக்குடா, கூனித்தீவு மற்றும் கடற்கரைச்சேனை​ ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போதிய பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினாலும், எரிபொருள் விலையேற்றம் காரணமாகவும் தனியார் போக்குவரத்துகளை பயன்படுத்த முடியாமல் முடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.​

பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இதனால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0