சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்யச் சென்ற பெண் உயிரிழப்பு.!
சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்யச் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று காலை 7.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
கம்பஹா மாவட்டத்தில் உள்ள இம்புல்கொட பகுதியில் உள்ள தமயந்தி வயது 65 என்ற பெண் நேற்று இரவு(28) தனது குடும்பத்துடன் சிவனடிபாத மலைக்கு சென்று தரிசனம் செய்த பின்னர் மீண்டும் திரும்பி வரும் போது மாகிரிதம்ப பகுதியில் வைத்து திடீரென சுகயீனம் அடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் தற்போது அவரது உறவினர்கள் ஊடாக நோயாளர் காவு வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூற்று பரிசோதனை செய்த பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.