கள்ள மண் ஏற்றிய வாகனத்தை மடக்கிப் பிடித்த விசேட அதிரடிப்படையினர்.!
கற்கோவளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்சியாக சட்டவிரோதமாக மணல் மண் அகழ்ந்து விற்பனை செய்து வருவதாக பருத்தித்துறை விசேட அதிரடிப் படையினருக்கு மக்கள் முறைப்பாடு வழங்கியிருந்த நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் சட்டவிரோத மணல் மண் அகழ்ந்து கொண்டிருந்தபோது சுற்றிவளைத்த சிறப்பு அதிரடிப் படையினர் வாகனத்தை கைப்பற்ற முற்பட்ட போது குறித்த வாகனம் மிக வேகமாக தப்பி சென்றுள்ளது.
இந்நிலையில் இரவு 11:00 மணியிலிருந்து துரத்தி சென்ற விசேட அதிரடிப் படையினர் அதிகாலை 4 மணியளவில் வாகனத்தை கைப்பற்றியுள்ளனர். எனினும் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.
கைப்பற்றப்பட்ட வாகனம் பருத்தித்துறை பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக விசேட அதிரடி படையினாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

