தகுதியற்ற பாம் எண்ணெய் விற்பனை: சுங்க அதிகாரி கைது.!
மனித நுகர்விற்கு தகுதியற்றதாக அறிவிக்கப்பட்ட பாம் எண்ணெயை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் சுங்க அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனித பயன்பாட்டிற்கு உதவாததாகக் கருதப்பட்ட ஐந்து கொள்கலன் பாம் எண்ணெய்களை அழிக்குமாறு முன்னதாக உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும், அந்த உத்தரவை மீறி, அவற்றை வேறு இடத்திற்கு மாற்றி, ஒரு கொள்கலனில் இருந்த பாம் எண்ணெயை சுமார் 40 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த பாம் எண்ணெய்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகக் காட்டும் போலியான ஆவணங்களையும் சமர்ப்பித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இச்சம்பவத்தையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், மேலதிகவிசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.