உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

உணவுப் பொருட்களை பதுக்க வேண்டாம்: பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

நாட்டில் போதுமான அளவில் உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதால், தேவையற்ற முறையில் அவற்றை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்காக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளார்.


பண்டிகைக் காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.அத்துடன், அண்மையில் இடம்பெற்ற எரிபொருள் விலை மாற்றத்தைத் தொடர்ந்து பொருட்களின் விலை உயர்வு குறித்து பல்வேறு தொழிற்சங்கங்களும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன.


எரிபொருள் விலை உயர்வினையும் பொருட்படுத்தாமல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்வதே இக்கலந்துரையாடல்களின் நோக்கமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0