உணவுப் பொருட்களை பதுக்க வேண்டாம்: பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்.!
நாட்டில் போதுமான அளவில் உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதால், தேவையற்ற முறையில் அவற்றை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்காக பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.அத்துடன், அண்மையில் இடம்பெற்ற எரிபொருள் விலை மாற்றத்தைத் தொடர்ந்து பொருட்களின் விலை உயர்வு குறித்து பல்வேறு தொழிற்சங்கங்களும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன.
எரிபொருள் விலை உயர்வினையும் பொருட்படுத்தாமல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்வதே இக்கலந்துரையாடல்களின் நோக்கமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது